Posts

Showing posts from 2020

நியாயத்தின் மறுபக்கம்

                                                     நியாயத்தின் மறுபக்கம் -சாந்தி நாதன்   “அப்பா,அம்மா ரெடியா? கல்யாண மண்டபம் இங்கிருந்து ரெம்ப தூரம். பெங்களூர் டிராஃபிக்கில் இப்ப கிளம்பினாதான் நீங்க கரெக்டான நேரத்துக்குப் போய் சேர முடியும்.” அலுவலகம் செல்லத் தயாராக மாடியிலிருந்து இறங்கியவாறே கௌசிக் கேட்க, “இதோ நாங்க ரெடி. பட்டு வேட்டி சட்டையில் சுந்தரமும் அவருக்குப் பின்னால் புடவையை சரி செய்தவாறே  வசுமதியும் வந்தனர். நெருக்மாககக் கட்டிய மல்லிகைப் பூவை மருமகள் கலா, “அத்தை இந்தாங்க “ என்றபடி நீட்ட, “ஏம்மா நீ வச்சுக்கலை? ஆர்த்திக்கும் வைக்கலை போலிருக்கே” பள்ளிச் சீருடையில் நிற்கும் பேத்தியைப் பார்த்துக் கொண்டே கேட்டாள். சாயங்காலம் வந்து விளக்கேற்றிய பிறகு நான் வச்சுப்பேன். ஸ்கூலுக்குப் பூவெல்லாம் வைக்கக் கூடாது “ பதில் சொல்லியபடியே தனக்கும் கணவனுக்கும் காலை உணவுக்குத் தட்டுகள் வைத்தாள்.           ...

மனு நீதி

                                                                மனு  நீதி                                            -சாந்திநாதன்  பாட்டியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு தன்  பள்ளிக்கூட  கதைகள் ஏதையோ சொல்லிக் கொண்டு தட்டில் இருக்கும் பொங்கலை  சாப்பிடும் ராகவ்வைப் பார்த்தவாறே செருப்புகளைக்  கழற்றிய  அனுஷா ,” என்னமா உனக்கும் அப்பாவுக்கும் மிச்சம்  வைக்காம  இவனுக்கு எல்லாத்தையும் கொடுத்திட்டியா?” சொல்லியவாறே மகன் தட்டிலிருந்து ஒரு ஸ்பூன் பொங்கலை வாயில் போட்டுக் கொண்டவள் “எப்படியம்மா நீ  பண்ற  பொங்கல் மட்டும் இவ்வளவு டேஸ்டாயிருக்கு?” என்றாள். “அம்மா,  கொத்சோட  சாப்பிட்டுப் பார். இன்னும் சூப்பராயிருக்கும்” சொன்னபடியே கொத்சைக் கலந்து அம்மாவின் வாயில் ஒரு ஸ்பூன் ...

A 75th Birthday Gift from my grandaughter

  Amamma   Her fair face glows  With a divine radiance  As she smiles.  Her perfectly sculpted nose  And beaming eyes  Sparkling.  Eagle eyed, she searches  For the smallest of our worries  And wipes them away  With words reassuring  And gentle caress  Healing.  For years her soft hands have toiled Incessantly  for us, Their touch transforming every dish into sumptuous, Magical.  Strong willed and determined, Every obstacle She has overcome,  To bless us  With that sacred place called home.  In that infinite abyss Of warmth and love We shall always reside,  Protected.

மௌனம் பேசியது

மௌனம் பேசியது பெங்களூரின் இதமான காலைக் குளிரை அனுபவித்தபடி ஒரு கையில் காபியும் மறு கையி்ல் தினசரியுமாக வராண்டாவில் வந்து அமர்ந்த கணேசன் ஹாலில் ஒலித்த தொலைபேசியை ஓடிச்சென்று எடுத்தான். "யாரு கணேசனா?நான் சென்னையிலிருந்து ராமு மாமா பேசறேன் . “...”சொல்லுங்க மாமா எப்படி இருக்கீங்க? அப்பா அ ம் மா சௌக்கியம் தானே?"   "உங்க அம்மா காலையி ல் துளசி மாடத்துக்கிட்டே வழுக்கி விழுந்துட்டா. வெளிக் காயமோ அடிபட்ட இடத்துல ரத்தக் கசிவோ ஒண்ணுமி் ல் லை. ஆனா நினைவு இல்லாம மயக்கநிலையிலேயே இருக்கா. உங்க குடும்ப டாக்டர் பாலசந்திரன் வந்து பார்த்துட்டு உடனடியா ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணச் சொல்லிட்டார். ஆம்புலன்ஸுக்கு காத்திருக்கும் நேரம் உனக்குத் தகவல் சொல்லிடலாமேன் தான்".... "எ ங் கம்மா விழுந்த நேரம் எங்கப்பா என்ன பண்ணிண்டு இருந்தார்.? வயசான காலத்தில தனியா இருக்கவேணடாம். எங்க மூணுபேரில யாரிட மா வது வந்து இருங்கன்னு சொன்னா எனக்கு அங்கெல்லாம் சரிப்படாதுன்னு அப்பா சொல்றதும் அம்மா அவரை எதிர்த்து பேசாம அவருக்குத் தலையாட்டறதும் இ்ன்னிக்கு இப்படி ஒரு நிலமைக் கு கொண்டு விட்டிருக்கு" . கோப...