கல்யானமே வைபோகமே சாந்தி நாதன் " சிவகுமார் வெட்ஸ் நந்தினி " மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்ணப்பலகை வாயிலில் வரவேற்கும் அந்த பெரிய திருமணக்கூடம் விருந்தினர்களால் நிரம்பி இருந்தது. வாயிலின் மறுபுறம் "சிவநேசன் குரூப்ஸ் உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்று பளீர் எழுத்துக்கள் மின்ன , அதன் அருகில் நின்றுகொண்டு வருபவர்களை இன்முகத்தோடு வரவேற்றுக் கொண்டிருந்தனர் மணமகன் சிவகுமாரின் பெற்றோர் கதிரேசனும் சரஸ்வதியும். "எல்லாரும் நேரா டைனிங் ஹாலுக்குப் போய் டிபன் சாப்பிடுங்க முகூர்த்தத்த...
Posts
Showing posts from November, 2021
- Get link
- X
- Other Apps
அகர முதல சாந்தி நாதன் அலுவலகத்திலிருந்து உற்சாகமாக உள்ளே வந்த சுரேந்தர் கார் சாவியை ஆணியில் மாட்டியபடியே " பாக்யா , ஹரீஷ் , சிந்து இங்க வாங்க" என அழைத்தான். படித்துக் கொண்டிருத்த இருவரும் அறையிலிரு்து வெளிவர , பாக்யாவும் கணவனுக்கு காபி கோப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். "இங்க பாருங்க " என்று ஒரு அழைப்பிதழை மேஜையின் மீது வைத்தவன் ," எங்க எம்.டி.மகன் முகுந்த் நிச்சயதார்த்த இன்விடேஷன். பெண் வீடும் பெரிய இடம். மும்பையி்ல் பெரிய பிசினஸ்மென். கல்யாணம் மும்பையில் என்பதால் என்ங்கேஜ்மெண்ட் இங்க எல்லாரையும் கூப்பிட்டு செய்கிறார். ஆபிஸ் ஸ்டாஃப் எல்லாரும் குடும்பத்தோட வரணும்னு கண்டிப்ப சொல்லியிருக்கார் . ஞாயிற்றுக்கிழமை உங்க ரெண்டு பேருக்கும் லீவு தான். எல்லாரும்மா போகலாம்." " இன்விடேஷனே அமர்களமா இருக்கே" ஹரீஷ் கூற , " சிட்டியிலேயே பெஸ்ட்மேரேஜ் ஹால். காட்டரிங்கும் பெரிய பார்ட்டி. முகுந்த் அவங்க அப்பா இடத்துக்கு வரப் போறார். அதனால நாம இந்த ஃபங்ஷனக்குக் கண்டிப்பாப் போய...
- Get link
- X
- Other Apps
மெய்யுணர்வு ஹோம் ஒர்க் செய்யும் மகனின் அருகில் மகளை மடியில் அமர்த்திக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்த வினயா கணவன் ஏன் வரவில்லை என்ற கவலையோடு காத்திருந்தாள். "அம்மா , அப்பாவோட வண்டி சத்தம் கேக்கறது. நான் போய் கதவைத் திறக்கறேன். பாப்பா தூங்க ஆரம்பிக்கறா. நீ அவளை மெதுவா எடுத்திண்டு போயி படுக்கையில விட்டுட்டு வா." சொன்னவாறே கதவைத் திறக்கச் செல்லும் மகனைப் பெருமிதமாகப் பார்த்துக் கொண்டே குழந்தையை உள்ளறையில் படுக்கப்போட்டுவிட்டு வெளியே வந்தாள் வினயா . காலணிகளை கழற்றிய வேகமும் உள்ளே நுழைந்து சட்டையைக் கழற்றி எறிந்த விதமும் வினயாவிற்கு இன்றும் மாதவனின் வேலைகள் சுணங்கிவிட்டது என்பதை உணர்த்தியது. "நான் போய் டீ கொண்டு வரேன்." வினயா நகர , ஒரு குவளையில் தண்ணீரோடு அங்கு வந்தான் வருண். "இந்தாங்கப்பா" மகனைப் பார்த்து புன்னகைத்தவாறே ஒரு கையால் குவளையை வாங்கிக் கொண்டு மறு கையால் அவனை அணைத்துக் கொண்டான். ...